திருப்பூர்: இரவு நேரத்தில் ரயிலில் பயணம் செய்யும் பெண் பயணிகள், நடமாடும் நகைக் கடைகளைப் போல் தங்க நகை களை அள்ளிப் போட்டுக் கொண்டு பயணம் செய்யவேண் டாம். இது திருடர்களைத் திரு டத் தூண்டிவிடும் என்பதால் எச்சரிக்கையாக இருக்கவேண்டி யது முக்கியம் என்று அறிவிப்பு கள் வைக்கப்பட்டுள்ளன.
அண்மையில் சென்னை நோக்கிச் சென்ற ரயிலில் பெண்களிடம் 31 சவரன் நகையை ஒரு கும்பல் கொள்ளை அடித்ததைத் தொடர்ந்து சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை ரயில் நிலை யங்களில் பெண் பயணியரை எச்சரிக்கும் விதமாக இந்த அறி விப்புகள் இடம்பெற்றுள்ளன.