சிவகாசி: மதுரை அரசு மருத்துவ மனையில் ஐந்து நோயாளிகள் மின்தடையால் இறந்தது குறித்து மருத்துவர்கள் கூறும் காரணம் முற்றிலும் பொய்யானது என மருத் துவர்கள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கூறினார்.
"அரசின் தவறுதலால்தான் நோயாளிகள் இறந்துள்ளனர். இதன் தொடர்பில் அரசு உரிய விசாரணை நடத்தவேண்டும். 'இன்வர்ட்டர்' செயல்படவில்லை. மருத்துவமனை மின்பொறியாளர் தகுதியானவர் அல்ல. அரசு முழு பூசணிக்காயைச் சோற்றில் மறைக் கிறது. அரசு மருத்துவமனைகள் சரியாகச் செயல்படவில்லை. இதை வலியுறுத்தி சென்னையில் இன்று மே 15ல் போராட்டம் தொடரும்," என்றார் ரவீந்திரநாத்.