மயிலாடுதுறை: கெயில் நிறுவனத்துக்கு எதிராக போராடிய நிலம் நீர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் இரணியன் கைது செய்யப்பட்டுள்ளார். மயிலாடுதுறை அருகே காளகஸ்திபுரம், முடிகண்டநல்லூர் உள்ளிட்ட இடங்களில் கெயில் நிறுவனம் எரிவாயுக் குழாய் பதித்து வருகிறது. இந்நிலையில், கெயில் நிறுவனத்தின் பணிகளைத் தடுத்ததாக விவசாயிகள் எட்டு பேர் மீதும் செம்பனார் கோவில் போலிஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
கெயில் எதிர்ப்பு: ஒருவர் கைது
1 mins read

