சென்னை: இந்தியாவில் மதுபான புழக்கம் கடந்த 7 ஆண்டுகளில் 38% அதிகரித்திருப்பதாக மருத் துவ உலகின் புனித இதழாகப் போற்றப்படும் லான்செட் இதழ் தெரிவித்து இருப்பது அதிர்ச்சி யும் கவலையும் அளிக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தேசிய அளவில் மதுவிலக்கை நடைமுறைப் படுத்த தேவை ஏற்பட்டிருப்ப தையே அப்புள்ளி விவரங்கள் உணர்த்துவதாக அறிக்கை ஒன் றில் நேற்று அவர் கூறினார்.
இந்தியர்கள் மது குடிக்கும் அளவு மட்டுமின்றி, குடிக்கும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது என்றும் இதை அப்படியே விட்டுவிடக் கூடாது என்றும் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.