ரயில் கொள்ளைக் குடும்பம் சிக்கியது; நான்கு பேர் கைது

ரயில் கொள்ளைக் குடும்பம் சிக்கியது; நான்கு பேர் கைது

1 mins read

ஈரோடு: ஈரோடு, சேலம் பகுதி களில் ரயிலில் நகைப்பறிப்பு சம் பவங்களில் குடும்பத்துடன் ஈடு பட்டு வந்த 4 பேர் கொண்ட வட மாநில கும்பலை ரயில்வே போலிஸ் ஈரோட்டில் பிடித்தது.

மகாராஷ்டிரா மாநிலம் சோலாப் பூரைச் சேர்ந்த அந்தக் கும்பல் ஒவ்வொரு முறை தமிழகம் வரும் போதும் குறைந்தது 100 பவுன் நகைகளைக் கொள்ளை அடிக் காமல் சென்றது கிடையாது என்று போலிஸ் தெரிவித்தது.

அந்தக் கும்பலிடம் இருந்து 53 பவுன் நகைகளை போலிசார் மீட்டு உள்ளனர். விசாரணை தொடர் கிறது என்று அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.

ரயில்கள் மெதுவாகச் செல்லும் போது அவற்றில் ஏறி பெண்களிடம் அவர்கள் கொள்ளை அடித்து வந்ததாகக் கூறப்படுகிறது.