வேலூர்: தமிழகத்தில் சில பகுதி களைச் சேர்ந்த மக்கள் போதிய அளவில் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். சென்னையில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவுவது போலவே வேலூர் மாவட்டத்தின் கிராமப் பகுதிகளிலும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
இப்படி தண்ணீர் இன்றி தவிக்கும் கிராம மக்களுக்கு தனது டிராக்டரில் தண்ணீர் கொண்டுசென்று தந்து அவர் களின் தாகம் தீர்த்து வருகிறார் ஒரு விவசாயி.
தனது சொந்த விவசாயக் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து அதை டிராக்டர் மூலம் வீடு வீடாக தினமும் இலவசமாக விநியோகம் செய்து வருகிறார் மாம்பாக்கத்தைச் சேர்ந்த விவ சாயி ஒருவர். அவரது இந்தச் சேவை கிராம மக்களிடையே பாராட்டைப் பெற்று வருகிறது.
கோடை வெயில் காரணமாக வேலூர் மாவட்டம் முழுதும் கடும் வறட்சி நிலவுகிறது. நிலைமை யைச் சமாளிக்க மாவட்ட நிர்வா கம் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள போதிலும் பல கிராமங்களில் மக்கள் குடிநீருக் காக அலைமோதுகின்றனர்.
இந்நிலையில், திமிரி ஒன்றியம் கலவை அருகே உள்ள மாம்பாக் கம், குப்படிசாத்தம், சொரையூர் ஆகிய கிராம மக்களின் தாகத் தைத் தீர்க்க விவசாயியான செல் வம் என்ற குட்டி, 45, தனது விவசாயக் கிணற்றில் இருந்து டிராக்டர் மூலம் தண்ணீர் எடுத் துப் பொதுமக்களுக்கு வீடுவீடாக இலவசமாக விநியோகம் செய்து வருகிறார். மின்சாரப் பொறியாள ராகப் பணிபுரியும் செல்வத்துக்கு மனைவியும் பிள்ளைகளும் உள்ளனர். நாள்தோறும் குடிநீர் விநியோகம் செய்ய டிராக்டரின் டீசல் செலவுக்குத் தன் சொந்தப் பணத்தில் இருந்து ரூ.300 செலவு செய்கிறார்.
இதுகுறித்து செல்வம் கூறிய போது, "கிராமத்தில் அதிகரித்து வரும் தண்ணீர்த் தட்டுப் பாட்டைக் கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கு இலவசமாக குடிநீர் வழங்கி வருகிறேன். தின மும் ஒரு குடும்பத்துக்கு 3 முதல் 5 குடம் தண்ணீர் வழங்குகிறேன். தேவைப்பட்டால் கூடுதலாகவும் வழங்கிவருகிறேன். கோடை காலம் முடியும் வரை இலவசமாக குடிநீர் வழங்கத் திட்டமிட்டுள் ளேன்," என்றார் அவர்.