மதுரை: மதுரையைச் சேர்ந்த ஒரு தம்பதி சடலமாக 5 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டுள்ள நிலையில் இவர்களுடைய உயிரிழப்புக்கான காரணம் குறித்த விசாரணையின்போது கிராம மக்கள் பல்வேறு திடுக்கிடும் தகவல்களைத் தெரிவித்துள்ளனர்.
மிக ஆடம்பரமாக வாழ்ந்த இந்த தம்பதி இணைய சூதாட்டமான ரம்மி மூலம் ஏற்பட்ட பண இழப்பின் காரணமாகவே தங்களது உயிரை மாய்த்திருக்கலாம் என்றும் அக்கம்பக்கத்தில் வசித்தவர்கள் கூறியுள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள நாகமலை என்ற பகுதியைச் சேர்ந்தவர் வேங்கட சுப்பிரமணியன், 41. ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட இவ ருக்கும் மதுரையைச் சேர்ந்த பட்டு மீனாட்சி, 33, என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஆய்வுப்படிப்பை நிறைவுசெய்த வேங்கட சுப்பிர மணியனிடம் ஆய்வு மாணவியாக மீனாட்சி சேர்ந்தபோது இவருக்கும் மீனாட்சிக்கும் இடையே காதல் மலர்ந்து, கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். நாகமலை என்ஜிஜிஓ காலனியில் வசித்து வந்த இவர்களின் வீடு கடந்த சில நாட்களாக பூட்டிக் கிடந்துள்ளது. அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீச அழு கிய உடல்கள் மீட்கப்பட்டன. விசாரணை தொடர்கிறது.
காவலர்கள் வீட்டைத் திறந்து மாடிக்குச் சென்று பார்த்தபோது அங்கே வேங்கட சுப்பிரமணியனும் பட்டு மீனாட்சியும் உடல் அழுகிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ள னர்.
தம்பதிகள் இருவரும் யாருக்கும் எந்த விதமான தொந்தரவும் இல்லாமல், வாழ்ந்து வந்தனர். கணினி, ஆன்லைன் தொடர்பான வேலைகளைக் கணவனும் மனைவியும் சேர்ந்தே செய்து வந்தனர். மிக ஆடம்பரமாக வாழ்ந்த இவர்கள் ஆன்லைன் ரம்மி சூதாட்டம் மூலமாக பணத்தை இழந்து விட்டார்கள். அதனால் இறந்திருக்கலாம் என்று அக்கம்பக்கத்தினர் கூறினர்.
மேலும் இவர்களுக்குத் திருமணமாகி ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் குழந்தை பிறக்கவில்லை. அதன் காரணமாகவும் மனம் நொந்து இந்த முடிவை மேற்கொண்டிருக்கக் கூடும் எனவும் அக்கம் பக்கத்து வீட்டார் காவல்துறையினர் விசாரணையில் தெரிவித்தனர். நாகமலைத் தம்பதிகள் மரணம் தொடர்பாக அவர்கள் வசித்து வந்த வீட்டில் கிடைத்த ஆவணங்களைக் கைப்பற்றிய காவல்துறையினர், இந்த மரணம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.