பொதுத் தேர்தலிலும் சட்டமன்ற இடைத்தேர்தலிலும் படுதோல்வி கண்டதால் அம்மா மக்கள் முன் னேற்றக் கழகத்தினர் (அமமுக) துவண்டுபோயிருக்கும் நிலையில் அவர்களை மீண்டும் தாய்க் கழ கத்துடன் இணையும்படி அதிமுக அழைப்பு விடுத்துள்ளது.
அதிமுக அதிருப்தி எம்எல்ஏக் கள் 18 பேர் டிடிவி தினகரன் தனி அணியாக இயங்கி வந்தனர். இதனால் சபாநாயகர் தனபால் அவர்களைத் தகுதிநீக்கம் செய் தார். இதை எதிர்த்து அந்த எம்எல் ஏக்கள் நீதிமன்றம் சென்றபோதும் தீர்ப்பு அவர்களுக்குச் சாதகமாக வரவில்லை. அத்துடன், இரட்டை இலைச் சின்ன வழக்கிலும் தினகரன் தரப்பிற்குத் தோல்வியே கிட்டியது. இதையடுத்து, அமமுக என்ற பெயரில் அவர் தனிக்கட்சி தொடங்கினார்.
அண்மையில் நடந்து முடிந்த மக்களவை, சட்டமன்ற இடைத்தேர் தல்களில் போட்டியிட்ட அமமுக, அதில் வென்று அதிமுகவை ஆட் சியில் இருந்து அகற்றும் முனைப் புடன் களமிறங்கியது. ஆனால், அவர்களது எண்ணம் ஈடேற வில்லை. மாறாக, பெரும்பான்மைக் குத் தேவையான எம்எல்ஏக்களைப் பெற்று அதிமுக ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டது.
இதையடுத்து, அமமுகவின் முக்கியப் பொறுப்பாளர்கள் பலர் அதிமுகவிற்குத் தாவலாம் எனக் கூறப்பட்டது. இதை உறுதிசெய்யும் விதமாக, அமமுக அமைப்புச் செய லாளரும் தென்மண்டலப் பொறுப் பாளருமான முன்னாள் எம்எல்ஏ ஆர்.பி.ஆதித்தன் நேற்று முன் தினம் அதிமுகவில் சேர்ந்தார்.
இதைத் தொடர்ந்து, அமமுக வினர் இன்னும் பலரைத் தன் பக்கம் இழுக்கும் முயற்சியை அதிமுக முடுக்கிவிட்டுள்ளது. அதன் அதிகாரபூர்வ நாளேடான நமது அம்மாவில், ‘தம்பிகளே வாரீர் தாய்வீடு அழைக்குது’ என்ற தலைப்பில் ஒரு கவிதை நேற்று வெளியானது.