மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கூத்தப்பன்பட்டி கிராமத்தில் கோவில் திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
இதில் ஏராளமான காளைகளும் மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.
சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் மஞ்சுவிரட்டை நேரில் கண்டுகளித்தனர்.
காளைகள் முட்டியதில் 5 வீரர்கள் காயமடைந்தனர். வீரர்களுக்கும் யாரிடமும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வுக்காக பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
படம்: தகவல் ஊடகம்