திமுக தலைவர் ஸ்டாலின் அழைக்கப்படாததற்கு சில காரணங்கள், யூகங்கள் அடிப்படையில் கூறப்படுகிறது.
ஸ்டாலின் முதல்வரும் அல்ல, திமுக நாடாளுமன்றக் குழுவிலும் அவர் இல்லை. எனவே அவர் அழைக்கப்பட வில்லை எனக் கூறப்படுகிறது. ஆனால், குடியரசுத் தலைவர் மாளிகையில் நடக்கும் எல்லா விழாக்களுக்கும், பத்ம விருது பெற்றவர்கள் குடியரசுத் தலைவரின் விருந்தினர்களாக அழைக்கப்படுவது மரபு.
அந்த அடிப்படையில்தான் நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் அழைக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இருப்பினும், மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியின் தலைவர் என்ற முறையில் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்திருக்க வேண்டும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.

