முகிலன் வழக்கில் துப்பு கிடைத்துள்ளது: சி.பி.சி.ஐ.டி. தகவல்

சென்னை: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்து வந்தவர் சமூக ஆர்வலர் முகிலன். சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான இவர், கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி சென்னை செய்தியாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்­போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வன்முறையில் பொதுமக்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. காவல்துறை உயர் அதிகாரிகள்தான் வன்முறைக்குக் காரணம் என்பதற்கான ஆதாரங்களை வெளியிட்டார். இவற்றை வெளியிடுவதால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் முகிலன் தெரிவித்திருந்தார். அன்றிரவு எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 10.30 மணிக்கு நண்பர்களுடன் தொலைபேசியில் பேசி உள்ளார். ஆனால் அதன் பின் அவரிடம் இருந்து எந்தத் தகவலும் வரவில்லை. இதனையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி காவல்துறையினர் வசம் ஒப்­படைக்கப்பட்டது.

முகிலன் குறித்து சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் முகிலனை கண்டு பிடித்துத் தரக்­கோரி ஹென்றி திபேன் என்பவர் தொடர்ந்த வழக்கை நேற்று சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்தது. அப்போது சிபிசிஐடி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், முகிலன் மாயமான வழக்கில் துப்பு துலங்கியுள்ளது. அவர் குறித்த தகவலை வெளியிட்டால் விசாரணை பாதிக்கப்படும் எனக் கூறி வழக்கு விசாரணையை மூன்று வாரங்களுக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!