சென்னை: மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் தலைக்கவசம் (ஹெல்மட்) அணிவது கட்டாயம் என்பது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தலைக்கவசம் அணிவது தொடர்பாக 4 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் தலைக்கவசம் அணியாத காவல்துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து, நீதிபதிகள், ஹெல்மெட் அணியாதவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது எனக் கேள்வி எழுப்பினர். மேலும், இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து பயணம் செல்பவர்களில் ஒருவர்கூட தலைக் கவசம் அணியவில்லை எனக் கண்டித்த நீதிபதிகள், தலைக்கவசம் அணியாதவர்களின் வாகனங்களைப் பறிமுதல் செய்ய உத்தரவிட்டனர்.