தேனி: தேனி பகுதியில் உள்ளாட்சித் தேர்தல் பணிகளை அதிமுக தொடங்கியுள்ளதாகவும் துணை முதல்வர்
ஓ பன்னீர்செல்வத்தின் மகனும் தேனி நாடாளுமன்றத் தொகுதியின் எம்.பி.யான ரவீந்திரநாத் குமாரின் தம்பியுமான ஜெயபிரதீப் அதில் தீவிரம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்தவர்களுக்கு நன்றி செலுத்த ஜெயபிரதீப் தலைமையில் செல்லும் அதிமுகவினர் மக்களிடம் குறைகளைக் கேட்டு நிவர்த்தி செய்துவருகின்றனர். அந்த வட்டாரத்தில் நடைபெறும் விழாக்களிலும் ஜெயபிரதீப் கல்ந்துகொள்கிறார்.