சென்னை: தென்மேற்குப் பருவக்காற்று அரபிக் கடல் பகுதியில் வலுவடைந்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தெற்கு அரபிக் கடல் பகுதி, லட்சத்தீவு, மாலத்தீவு, கன்னியாகுமரி கடற்பகுதிகளில் மேகக்கூட்டங்கள் அதிகரித்திருப்பதாக மையம் கூறியுள்ளது.
தென்மேற்கு பருவமழை தொடங்கி இருப்பதாலும் வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும் சென்னையில் வெப்பத்தின் தாக்கம் குறைவதற்கு ஒரு வாரம் ஆகும் என்றும் வானிலை மையம் மேலும் தெரிவித்துள்ளது.