கிருஷ்ணகிரி: சூளகிரியில் அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அத்துடன் 15 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்த 15 பேரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி அரசு பேருந்து ஒன்று நேற்று காலை 4.30 மணியளவில் சென்று கொண்டிருந்தது. சூளகிரி அருகே வந்த போது திடீரென்று பேருந்தின் முன்புற டயர்கள் கழன்று விபத்துக்குள்ளானது.

