கோவை: அறுவை சிகிச்சையின் போது வயிற்றில் பஞ்சு வைத்து தைத்ததாக பெண் மருத்துவர் மீது வைக்கப்பட்ட புகார் குறித்து விசாரணை நடத்த கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட் டுள்ளார்.
கோவை மாவட்டம் பாப்பநாயக் கன்பாளையத்தைச் சேர்ந்த கணே சனின் மனைவி புவனேஸ்வரி வயிற்று வலிக்காக பெண் மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
புவனேஸ்வரிக்கு கர்ப்பப் பை, ஹெர்னியா பிரச்சினையும் உள் ளது. இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளித்த புளியர்குளம் பகுதியைச் சேர்ந்த அந்தப் பெண் மருத்துவர் சில மருத்துவப் பரி சோதனைக்குப் பின் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறினார்.
அதன்படி, கடந்த ஆண்டு இறுதியில் தனியார் மருத்துவ மனையில் புவனேஸ்வரிக்கு அக்குறிப்பிட்ட பெண் மருத்துவர் அறுவை சிகிச்சை மேற்கொண் டார்.
“அதன் பிறகு என் மனைவிக்கு தொடர்ந்து வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரைப் பரிசோதித்த மருத்துவர் கள் வயிற்றின் அடிப்பகுதியில் பஞ்சு போல் ஏதோ காணப்படு வதாகவும் அதை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
“இதையடுத்து சென்னை அரசு மருத்துவமனையில் மீண் டும் அறுவை சிகிச்சை நடை பெற்றது. இதன் மூலம் அவரது வயிற்றில் இருந்த பஞ்சு அகற் றப்பட்டது,” என்கிறார் கணேசன்.
இது குறித்து பெண் மருத்து வரிடம் கேட்ட போது அவர் சரியாகப் பதில் சொல்லவில்லை என்றும், தனது கணவருடன் சேர்ந்து தங்களைத் திட்டி காவ லாளியை வைத்து வெளியேற்றிய தாகவும் கணேசன் தம்பதியர் ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
புகாரைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்த தாகவும், தங்களுக்கு நியாயம் கிடைக்கும் என நம்புவதாகவும் கணேசன் தம்பதியர் கூறினர்.