சென்னை: ரயில்வே அதிகாரி களுக்கு இடையேயான தகவல் பரிமாற்றம் ஆங்கிலத்திலும் இந்தி மொழியிலும் மட்டுமே இருக்க வேண்டும் என்று தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளதற்கு அரசியல் தலைவர்களும் தமிழக தமிழ் அமைப்புகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த தடையைக் கண்டித்து சென்னையில் திமுக சார்பில் கண் டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள் ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை அருகே இரண்டு ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் நேருக்கு நேர் மோத இருந்த பெரும்விபத்து கடைசி நேரத்தில் தவிர்க்கப்பட் டது. இது தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே பணியாளர்கள் மூவர் அவர்களது பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதற்கு மொழிப் பிரச்சினையே காரணம் எனக் கூறப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் ரயில்வே நிலைய அதிகாரிகளுக் கும் கட்டுப்பாட்டு அறைக்கும் இடையே நடக்கும் தகவல் பரிமாற்றம் தமிழில் இருப்பதைத் தவிர்க்கவேண்டும் என தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.
மொழிப் பிரச்சினையால் தக வல் புரியாமல் போவதைத் தவிர்க்க இந்தி அல்லது ஆங் கிலத்தில் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும்படியும் தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுக்குத் தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழ் மொழியை உதாசீனப்படுத்தி னால் பல்வேறு தரப்பினரையும் திரட்டி போராடவேண்டிய நிலை வரும் என்று எச்சரித்துள்ளார்.
தெற்கு ரயில்வே துறை சுற்ற றிக்கை மத்திய அரசின் சட்டத் திற்கே எதிராக உள்ளது என குற்றம்சாட்டியுள்ள பெ.மணியரசன், தமிழ்நாட்டில் தமிழ்தான் அலுவல் மொழி என்ற நிலையை ஏற்படுத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
ஆங்கிலம், இந்தி மொழி மட்டுமே பயன்படுத்தவேண்டும் என ரயில்வே உத்தரவுக்குக் கவிஞர் வைரமுத்து எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். மொழியின் குரல்வளையைப் பிடிக்கப் பார்க் கிறார்கள் என்றும் கலாசாரத்தைக் களவாடப் பார்க்கிறவர்களே வேண்டாம் இந்த வேண்டாத விளையாட்டு என்றும் வைரமுத்து எச்சரித்துள்ளார்.