கிருஷ்ணகிரி: சூளகிரி அருகே தங்கள் உயிரைப் பணயம் வைத்து ஆபத்து நிறைந்த ஆழமான கிணற்றுக்குள் இறங்கி தண்ணீர் சேகரித்து வருகின்றனர் சூளகிரி மக்கள்.
இந்த அவலநிலை தொடர்ந்த போதிலும் அதிகாரிகள் எந்த நட வடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகின்றனர். எனவே உயிர்ப்பலி ஏற்படும் முன் அப்பகுதி மக்களுக்குத் தண்ணீர் விநியோகம் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை அடுத்த சூளகிரி ஒன் றியத்துக்கு உட்பட்ட டேம் எப்பளம் கிராமத்தில் ‘போர்வெல்’ மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் இந்த மின் இயந்திரம் பழுதுபட்டதால் கடந்த 30 நாட்களுக்கும் மேலாகத் தண் ணீர் விநியோகம் செய்யப்பட வில்லை என்று கிராம மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதுதொடர்பாக சூளகிரி ஒன்றிய அதிகாரிகள், பஞ் சாயத்து நிர்வாகத்திடம் பொது மக்கள் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.
தண்ணீர்த் தேவை பூர்த்தி யாகாத நிலையில், கிராமத்தின் அருகே ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விவசாய கிணற்றுக்குள் இறங்கி தண்ணீர் சேகரிக்கவேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இதுமட்டுமன்றி, ஒரு குடம் தண்ணீரை ஐந்து ரூபாய் விலை கொடுத்து கிராமத்தினர் வாங்கி வருகிறார்கள். நீரின்றி மக்கள் நெடுந்தூரம் சென்று தண்ணீர் எடுத்து வரும் நிலையும் தொடர் கிறது. மக்களின் அவதிக்கு ஒரு முடிவில்லாமல் உள்ளது.