சென்னை: அதிமுகவில் உட்கட்சி பூசல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதற்கு ஒட்டுமொத்தமாக முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் அக்கட்சித் தலைமை புதிய முடிவெடுத்திருப்பதாகக் கூறப்படு கிறது. அதன்படி, மேலும் மூன்று துணை முதல்வர்களை நியமிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளி யாகி உள்ளது.
இதையடுத்து துணை முதல் வர் பதவி யாருக்கெல்லாம் வழங் கப்படும் எனும் விவாதம் அதிமுக வட்டாரங்களில் துவங்கி உள்ளது.
அதிமுகவில் முதல்வர் பழனி சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் இயங்கி வந்த இரு அணிகள் இணைந்தபிறகு சிக்கல்கள் குறையும் என எதிர்பார்க்கப்பட் டது. ஆனால், நிலைமை அதற்கு நேர்மாறாகவே உள்ளது.
ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் தங்களுக்கும் கட்சியில் முக்கிய பொறுப்புகள், பதவிகள் அளிக்கப் பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதே சமயம் முதல்வர் பழனிசாமியோ தமது ஆதரவாளர்களுக்கு மட் டுமே முக்கியத்துவம் அளிப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் டெல்லி சென்ற முதல்வரை வரவேற்க அதிமுக வின் ஒரே மக்களவை உறுப்பி னரான ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் நேரில் வரா தது முணுமுணுப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த உட்கட்சிப் பூசலானது முதல்வர், துணை முதல்வர் ஆகிய இருவருக்குமே தலைவலியாக உருவெடுத்துள்ள நிலையில், இதற்குத் தீர்வாக ஆந்திர அரசின் வழிமுறையைப் பின்பற்றலாம் என முதல்வர் பழனிசாமியிடம் மூத்த நிர்வாகி கள் வலியுறுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஆந்திராவில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள ஜெகன்மோகன் ரெட்டி தமது அமைச்சரவையில் சாதிவாரியாக ஐந்து பேரைத் தேர்ந்தெடுத்து, துணை முதல்வர் களாக நியமித்துள்ளார். அதே போல் தமிழகத்திலும் கூடுதலாக 3 துணை முதல்வர்களை நியமிக் கலாம் என்பதே முதல்வரிடம் முன்வைக்கப்பட்டுள்ள யோசனை எனத் தெரிகிறது.
அதேசமயம் மூத்த துணை முதல்வராகக் குறிப்பிட்டு ஓ. பன் னீர்செல்வத்தின் பொறுப்புகளை மேலும் பரவலாக்குவது எனும் யோசனையையும் எடப்பாடி தரப்பு பரிசீலிப்பதாகக் கூறப்படுகிறது. ஆந்திராவைப் போலவே தமிழகத்திலும் சாதிவாரியாக துணை முதல்வர்கள் நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது.