கேரளாவில் பெண் காவலர் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை

ஆலப்புழா: பெண் காவலர் ஒரு வரை பட்டப்பகலில், பரபரப்பான சாலையில் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற சக ஆண் காவலர் கைதானார். இச்சம்பவத் தின் பின்னணி குறித்து கேரள மாநிலப் போலிசார் தீவிர விசா ரணை மேற்கொண்டுள்ளனர்.

உயிரிழந்த பெண் காவலர் சௌமியா புஷ்பாகரன், ஆலப்புழா வில் உள்ள காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார்.

இவருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கணவர் புஷ்பாகரன் வெளிநாட்டில் பணியாற்றுகிறார். கடந்த சனிக் கிழமை பணி முடிந்து இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிய சௌமியாவுக்கு பாதி வழியில் கடும் அதிர்ச்சி காத்திருந்தது.

முக்கிய சாலை ஒன்றில் வந்துகொண்டிருந்தபோது எதிரே வந்த கார் அவர் மீது மோதியது. இதில் நிலைகுலைந்து போன சௌமியா கீழே விழ, மோதிய காரில் இருந்து வெளிப்பட்ட அஜாஸ் என்ற போக்குவரத்துப் பிரிவு காவலர் அவரை சரமாரி யாகத் தாக்கினார்.

இதனால் வேதனை தாங்கா மல் தப்பியோட முயன்றார் சௌமியா. ஆனால், சிறிது தூரத்திலேயே அவரை மடக்கிப் பிடித்த அஜாஸ், கையோடு கொண்டு வந்திருந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றி பற்றி வைத்தார்.

இதில், சௌமியா சம்பவ இடத்திலேயே உடல் கருகி அலறி துடித்தபடி உயிரிழக்க, காவலர் அஜாஸுக்கும் உடலில் 40% தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே என்ன மோதல், கொலைக்கான பின்னணி என்ன என்பது தெரியவில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!