புதுடெல்லி: அக்னி நட்சத்திரம் முடிந்த பின்னரும் தமிழகத்தின் வட மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் நீடிக்கிறது. இந்நிலை யில் மேலும் 6 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும் என
வானிலை மையம் அறிவித்திருப்பது மக்கள் மத்தியில் கவலையை அதிகரித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், அரியலூர், திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் மேலும் தெரிவித்துள்ளது.