சென்னை: பாஜக கூட்டணியால் மட்டுமே நாட்டு மக்களுக்கு உரிய வளர்ச்சியைத் தர முடியும் என தமிழக பாஜக தலைவி தமிழிசை தெரிவித்துள்ளார்.
அதன்படி பாஜக தலைமையி லான மத்திய அரசு உடனே முயற்சி எடுத்துக்கொண்டிருக் கும் திட்டம்தான் காவிரி, கோதாவரி இணைப்புத்திட்டம் என்று அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக மக்களின் தாகம் தீர்க்கப்படும் என்று குறிப்பிட் டுள்ள அவர், நதிகள் இணைப்புத் திட்டம் குறித்து குறை கூறுவதற்கோ, அரசியல் லாபம் தேடுவதற்கோ திமுக வுக்கு எந்தவித உரிமையும் இல்லை என்று கூறியுள்ளார்.
திமுக ஆட்சிக் காலத்தில் நதிகள் இணைப்புக்கு ஏன் முயற்சி ஏதும் மேற்கொள்ளப்பட வில்லை? என்று கேள்வி எழுப்பி யுள்ள தமிழிசை, வீராணம் திட்டத்தில் மிகப்பெரிய ஊழல் செய்து தமிழகத்துக்கு தண்ணீர் வராமல் தடுத்தது திமுகதான் என்று தெரிவித்துள்ளார்.
பாஜக சிறப்பான ஆட்சியை வழங்கும் என்றும் அவர் திட்ட வட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.