திமுகவுக்குத் தகுதியில்லை எனச் சாடும் தமிழிசை

சென்னை: பாஜக கூட்டணியால் மட்டுமே நாட்டு மக்களுக்கு உரிய வளர்ச்சியைத் தர முடியும் என தமிழக பாஜக தலைவி தமிழிசை தெரிவித்துள்ளார்.

அதன்படி பாஜக தலைமையி லான மத்திய அரசு உடனே முயற்சி எடுத்துக்கொண்டிருக் கும் திட்டம்தான் காவிரி, கோதாவரி இணைப்புத்திட்டம் என்று அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக மக்களின் தாகம் தீர்க்கப்படும் என்று குறிப்பிட் டுள்ள அவர், நதிகள் இணைப்புத் திட்டம் குறித்து குறை கூறுவதற்கோ, அரசியல் லாபம் தேடுவதற்கோ திமுக வுக்கு எந்தவித உரிமையும் இல்லை என்று கூறியுள்ளார்.

திமுக ஆட்சிக் காலத்தில் நதிகள் இணைப்புக்கு ஏன் முயற்சி ஏதும் மேற்கொள்ளப்பட வில்லை? என்று கேள்வி எழுப்பி யுள்ள தமிழிசை, வீராணம் திட்டத்தில் மிகப்பெரிய ஊழல் செய்து தமிழகத்துக்கு தண்ணீர் வராமல் தடுத்தது திமுகதான் என்று தெரிவித்துள்ளார்.

பாஜக சிறப்பான ஆட்சியை வழங்கும் என்றும் அவர் திட்ட வட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!