சென்னை: நாடாளுமன்றத் தில் தமது தொகுதிக்காக மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த தமிழகத்தில் நிலவும் பிரச்சினைகளுக் காகவும் குரல் கொடுக்கப் போவதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியா ளர்களைச் சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரான அவர், அதிமுகவில் இரட்டைத் தலைமை எனும் பிரச்சினை எழுவதற்கு பாஜகவே காரணம் என்றார்.
மத்திய அரசின் தலை யீடு இருப்பதால்தான் இரட்டைத் தலைமை பிரச் சினை வெடித்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இரட்டைத் தலைமை என்பதையும் கூட டெல்லி தலைமை மற்றும் தமிழகத் தலைமை என்றே புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது என்றார்.
பிரதமரும் அதிமுகவை தலைமை தாங்கி வழி நடத்துகிறார் என்பதுதான் அவர்கள் மறைமுகமாக சொல்லும் செய்தி என்று சுட்டிக்காட்டிய அவர், அதிமுக சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பதே அக்கட்சித் தொண்டர்க ளுக்கு தாம் விடுக்கும் வேண்டுகோள் என்றார்.
“பிரதமரை சந்தித்த போது மாநிலப் பிரச்சினை கள் குறித்து பேசியதாக முதல்வர் பழனிசாமி கூறியதில் நம்பகத்தன்மை இல்லை. அவர் கட்சியில் நிலவும் பிரச்சினைகள் குறித்து தான் பிரதமரிடம் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது,” என்றார் திருமாவளவன்.