சென்னை: அமமுகவை சிறிய கட்சி என்று கிண்டலடித்த அதிமுக தலைமை, தற்போது அமமுகவில் இருந்து தினந்தோறும் யாரையேனும் அதிமுகவில் இணை வதாக செய்தி வெளியிடுவது ஏன்? என டிடிவி தினகரன் (படம்) கேள்வி எழுப்பியுள்ளார்.
அமமுகவின் பொதுச்செயல ரான அவர், கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய போது, அதிமுக கலகலத்துப் போயிருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று என்றார். அதனால்தான் தேர்தல் தோல்விக்குப் பிறகு அமமுக கட்சி நிர்வாகிகளைச் சந்திக்க வீடு வீடாகச் சென்று இரு கட்சிகளும் ஒன்றாகிவிடும் என்று சிலர் சொல்லிக் கொண்டிருக்கி றார்கள் என்றார் தினகரன்.
“ஒருசிலர் கட்சியை விட்டுச் செல்வதற்கு காரணம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தேர்தலில் தோல்வி அடைந்தவுடன் மண்டலப் பொறுப்பாளர் மீது குறை சொல்லி விட்டு கட்சியை விட்டுச் சென்று விட்டார்கள். மண்டலப் பொறுப்பா ளர் நிர்ப்பந்திப்பதை எல்லாம் கட்சித் தலைமை செயல்படுத்த வில்லை. மாறாக நான் என்ன சொல்கி றேனோ அதை மட்டுமே அவர்கள் செயல்படுத்தினார்கள்,” என்றார் தினகரன்.
தேர்தலில் தோல்வி அடைந்தால் ஒருசிலர் கட்சியை விட்டுப்போவது இயல்புதான் என்று குறிப்பிட்ட அவர், அமமுகவில் இருந்து பெரிய அளவில் யாரும் கட்சி மாறவில்லை என்றார். மேலும் ஆளும் கட்சியினரால் அமமுக வினர் சிலர் மிரட்டப்பட்டதாகவும் தினகரன் குற்றம்சாட்டினார்.
“எங்கள் கட்சியை விட்டு சென்ற நிர்வாகிகள் பலரை நாங் களே கட்சியை விட்டு நீக்குவதாக இருந்தோம். எனினும் அவர்க ளாகச் செல்லட்டும் என்று பெருந் தன்மையுடன் காத்திருந்தோம்,” என்றார் தினகரன்.