9 பெண்களை ஏமாற்றி ரூ.9 கோடி சுருட்டிய காதல் சக்கரவர்த்தி

சென்னை: மருத்துவர்கள் பொறி யாளர்கள் போன்ற படித்த, பணக்கார, அந்தஸ்துமிக்க ஒன் பது பெண்களைத் திருமணம் செய்வதாக ஏமாற்றி அவர்களிடம் ரூ.9 கோடி பணத்தைச் சுருட்டி சக்கரவர்த்தியாக சுகபோகத்தில் திளைத்த சக்கரவர்த்தி என்ற 34 வயது ஆடவர் இப்போது சிறையில் இருக்கிறார்.

திருவண்ணாமலையைச் சேர்ந்த முதுநிலை பட்டப்படிப்பு பொறியாளரான சக்கரவர்த்தி, சென்னையில் தான் தங்கியிருந்த போது இணையத்தளம் வழியாக பெண்களைக் கண்டுபிடித்து ஏமாற்றும் தந்திரத்தை அரசு அதிகாரி ஒருவர் தனக்குக் கற்றுக்கொடுத்ததாக போலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்து இருக்கிறார்.

அந்த அரசு அதிகாரியின் ஆலோசனையின்படி செயல்பட்ட சக்கரவர்த்தி, மதுரையில் பொறி யாளர்களான இரண்டு பெண் களை ஏமாற்றினார். அவர்களிடம் இருந்து ரூ. 90 லட்சம் பணத்தைச் சுருட்டினார். பிறகு இதுவே அவரின் முழுநேர தொழிலாகியது.

மருத்துவர்கள், பொறியாளர்கள், சமூகத்தில் அந்தஸ்துமிக்கவர்களாகப் பார்த்து பழகி மொத்தம் ஒன்பது பெண்களை இவர் ஏமாற்றி இருக்கிறார்.

அவர்களில் பெரும்பாலானவர் கள் 35 வயதைக் கடந்தும் திரு மணம் ஆகாமல் இருந்தவர்களும் கணவரை இழந்த இளம் வயது விதவைகளும் அடங்குவர்.

சக்கரவர்த்தியின் வலையில் விழுந்த பெண்களில் சென்னை யைச் சேர்ந்த 38 வயது மருத்து வரும் ஒருவர். உடல் பருமனான இவர், சக்கரவர்த்தியிடம் ரூ. 7 கோடி கொடுத்து ஏமாந்தார்.

அந்தப் பணத்தைக் கொண்டு சக்கரவர்த்தி, சென்னையிலும் திருவண்ணாமலையிலும் வீடு களை வாங்கினார். சொகுசு கார் களையும் வாங்கினார்.

பிறகு அந்த மருத்துவரைக் கைவிட்டுவிட்டு இதர பெண் களுக்கு வலை வீசி அதில் வெற்றி யும் கண்டார். மதுரை, திருச்சி யைச் சேர்ந்த நான்கு பெண்கள் சக்கரவர்த்திக்கு எதிராக போலி சில் புகார் தெரிவித்தனர். அந்தப் புகார்களின் பேரில் மதுரை, திருச்சியில் சக்கரவர்த்தி சிறை வாசமும் அனுபவித்தார்.

தன்னிடம் ஏமாந்த திருவண் ணாமலையைச் சேர்ந்த ஒரு பெண்ணை இவர் முறைப்படி திரு மணம் செய்தார். ஒரு பெண் குழந்தை பிறந்ததும் சக்கரவர்த்தி யின் தில்லுமுல்லுகளைத் தெரிந்து கொண்ட மனைவி, அவரிட மிருந்து பிரிந்து சென்றுவிட்டார்.

இதனிடையே, சக்கரவர்த்தி யிடம் ரூ. 7 கோடி பணத்தைக் கொடுத்து ஏமாந்த சென்னை பெண் மருத்துவர், அந்தப் பணத் தைப் பயன்படுத்தி சக்கரவர்த்தி வாங்கிய சொத்துகளின் பத்திரங் களை அவரிடமிருந்து வாங்கிக் கொண்டு சென்றுவிட்டதாக போலிஸ் விசாரணையில் தெரிய வந்து இருக்கிறது.

சக்கரவர்த்தி இப்போது சென்னையில் சிறையில் அடைக் கப்பட்டு இருக்கிறார். அவரிடம் விசாரணை நடக்கிறது. எல்லாவற் றையும் மறந்துவிட்டு திருந்தி தன் மனைவியுடன் மீண்டும் வாழ்க் கையைத் தொடங்க வேண்டும் என்று தான் விரும்புவதாக சக்கர வர்த்தி வாக்குமூலத்தில் தெரி வித்து உள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!