சென்னை: கடந்த வாரம் ஆபரணத் தங்கம் விலை திடீரென அதிகரித்தது. இந்த நிலையில் நேற்று அதன் விலை மேலும் அதிகரித்து புதிய உச்சத்தைத் தொட்டு உள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.43 உயர்ந்துள்ளது. அதாவது ஒரு கிராம் தங்கம் ரூ.3,308க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதன் அடிப்படையில் ஒரு சவரனுக்கு ரூ.344 உயர்ந்து ரூ.26,464க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்க விலை அதிகரிப்பால் நடுத்தர மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் வெள்ளி விலையும் நேற்று அதிகரித் தது. ஒரு கிராம் வெள்ளி விலை 10 காசு உயர்ந்து ரூ.41.40க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.41,400க்கும் விற்பனை செய்யப்பட்டது.