மதுரை: தூதஞ்சல் சேவை (Courier service) நிறுவனத்தில் இருந்து 'பார்சல்' விநியோகிக்க வந்துள்ளதாகக் கூறி 32 லட்ச ரூபாய் ரொக்கப் பணத்தையும் 48 சவரன் தங்க நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றது மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அங்குள்ள சின்ன கண்மாய் பகுதியில் வசிக்கும் வெற்றிவேல் என்பவரது வீட்டிற்கு 'பார்சல்' விநியோகம் செய்வதுபோல் இரு இளையர்கள் வந்தனர். அதைக் கொடுப்பதுபோல் நடித்து, அவர் மீது மிளகாய்ப் பொடியைத் தூவி, பின் ஒட்டுப்பட்டையால் அவரது வாயை ஒட்டினர்.
அங்கிருந்த வயதானவர்கள் இருவரை வேறு ஓர் அறையில் தள்ளி பூட்டிவிட்டு, அவர்கள் அணிந்திருந்த தங்க நகைகளைப் பறித்தனர். பின் முதல் மாடிக்குச் சென்று அங்கிருந்த 32 லட்ச ரூபாயையும் எடுத்துக்கொண்டு அவர்கள் தப்பியோடினர்.
கண்காணிப்புப் படக்கருவியில் பதிவான காணொளியின் துணை யுடன் போலிசார் கொள்ளையர்
களைத் தேடி வருகின்றனர்.