தூதஞ்சல் சேவையாளர்கள்போல் நடித்து நகை, பணம் கொள்ளை

மதுரை: தூதஞ்சல் சேவை (Courier service) நிறுவனத்தில் இருந்து 'பார்சல்' விநியோகிக்க வந்துள்ளதாகக் கூறி 32 லட்ச ரூபாய் ரொக்கப் பணத்தையும் 48 சவரன் தங்க நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றது மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அங்குள்ள சின்ன கண்மாய் பகுதியில் வசிக்கும் வெற்றிவேல் என்பவரது வீட்டிற்கு 'பார்சல்' விநியோகம் செய்வதுபோல் இரு இளையர்கள் வந்தனர். அதைக் கொடுப்பதுபோல் நடித்து, அவர் மீது மிளகாய்ப் பொடியைத் தூவி, பின் ஒட்டுப்பட்டையால் அவரது வாயை ஒட்டினர்.

அங்கிருந்த வயதானவர்கள் இருவரை வேறு ஓர் அறையில் தள்ளி பூட்டிவிட்டு, அவர்கள் அணிந்திருந்த தங்க நகைகளைப் பறித்தனர். பின் முதல் மாடிக்குச் சென்று அங்கிருந்த 32 லட்ச ரூபாயையும் எடுத்துக்கொண்டு அவர்கள் தப்பியோடினர்.

கண்காணிப்புப் படக்கருவியில் பதிவான காணொளியின் துணை யுடன் போலிசார் கொள்ளையர்

களைத் தேடி வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!