நெல்லை: தமிழகத்தில் நியூட்ரினோ திட்டத்தை வலுக்கட்டாயமாக செயல்படுத்த மத்திய அரசு முயற்சி செய்வதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், வலுக்கட்டாயமாக இந்தி, சமஸ்கிருத மொழிகளைத் திணிக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். எட்டு வழிச்சாலை திட்டம் விவசாயிகளுக்கு எதிரானது என்றும் அவர் கூறியுள்ளார்.