சென்னை: பாமகவின் 31வது ஆண்டு விழாவை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் உள்ள பாமக அலுவலகத்தில் இளையரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பாமகவால் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவே மாற்றம் அடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
புதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா கருத்து தெரிவித்ததில் தவறில்லை என்ற அவர், புதிய கல்விக்கொள்கை வரைவை ஆய்வு செய்ய பாமக குழு ஒன்றை அமைத்துள்ளதாகக் கூறினார். நீட், எக்ஸிட் தேர்வுகள் எல்லாம் தனியார் பயிற்சி மையம் உருவாகவே வழிவகுக்கும் என்றும் அன்புமணி குறிப்பிட்டார்.