தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற சரவணபவன் ராஜகோபாலுக்கு அனுமதி

சென்னை: ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமார் கொலை வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு சுவாசக் கோளாறு இருப்பதாக ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர். எனவே அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 8 நாட்களாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது சிறுநீரகங்கள் செயலிழந்து, உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சிகிச்சைக்காக ராஜகோபாலை தனியார் மருத்துவமனைக்கு மாற்றக் கோரி அவரது மகன் ரா.சரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்திருந்தார்.

இந்த மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் அடங்கிய அமர்வு, ராஜகோபாலுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து ஸ்டான்லி மருத்துவமனையின் தகவல்களைப் பெற்று விளக்கமளிக்க அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டனர். தள்ளிவைக்கப்பட்ட வழக்கு விசாரணை நேற்று மீண்டும் நடத்தப்பட்டது.

தற்போதைய நிலையில் அவரை இடமாற்றுவது சிக்கலானது என ஸ்டான்லி மருத்துவமனை தெரிவித்தது. ஆனால் அதற்கு தான் முழுப்பொறுப்பேற்பதாக ராஜகோபால் மகன் தரப்பு கூறியது. அதனைத் தொடர்ந்து ராஜகோபால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!