ஏடிஎம்மில் கள்ளநோட்டுகள்: நல்ல நோட்டுக்கு போராட்டம்

நாமக்கல்: நாமக்கல்லைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் சேந்தமங்கலம் மின்வாரிய அலுவலகத்தில் முதல்நிலை முகவராகப் பணிபுரிந்து வருகிறார்.

திங்கட்கிழமை இரவு நாமக்கல் சங்கரன் சாலையில் உள்ள எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் மையத்தில் அவர் ரூ.40 ஆயிரம் எடுத்துள்ளார். அதில், ஐந்து 2000 ரூபாய் நோட்டுகள் ஒட்டப்பட்ட கள்ளநோட்டுகளாக வந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அருகே உள்ள எஸ்பிஐ வங்கியில் புகார் அளிக்க சென்றார். அப்போது, அங்கிருந்த அதிகாரிகள் மூர்த்தியிடம் வங்கிக் கணக்கு எண்ணைக் கொடுத்துவிட்டு மறுநாள் வரும்படி கூறியுள்ளனர். மேலும் வங்கியின் நுழைவாயிலைப் பூட்டினர்.

இதனால் ஆத்திரமடைந்த மூர்த்தி, ஒட்டப்பட்ட கள்ள ரூபாய் நோட்டுகளை நுழைவாயிலின் முன்பு வைத்துவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலிசார், மூர்த்தியிடம் சமரசம் பேசினர். பின்னர் அவரை வங்கிக்குள் அழைத்துச் சென்றனர்.

புகார் மனுவுடன் கள்ள நோட்டுகளைப் பெற்றுக்கொண்ட வங்கி அதிகாரிகள் ரூ.10 ஆயிரத்தைத் திருப்பித் தருவதாகக் கூறினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!