சென்னை: ஒருமுறைக்கு இருமுறை யோசித்து பேச வேண்டும், நினைத்ததையும் யோசனையின்றி பேசக்கூடாது என்ற அறிவுறுத்தலுடன் வைகோவுக்கான தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது உயர்நீதிமன்றம்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மதிமுக பொதுச் செயலாளருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனை எதிர்த்து வைகோ தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆதிகேசவலு, ஓராண்டு தண்டனையை நிறுத்திவைத்து உத்தரவிட்டார். அத்துடன் வழக்கு முடியும்வரை பேசாமல் கவனமாக இருக்கவேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.