கோவையில் கடும் வெப்பம் பல நாட்களாக நிலவி வந்த நிலையில் திடீரென்று வியாழக்கிழமை பெரும் மழை பெய்தது. இதனால் பல இடங்களிலும் குப்பைக்கூளங்கள் காரணமாக சாக்கடைகள் அடைத்துக்கொண்டன.
கோவை ரயில் நிலையம் அருகே தேங்கி நின்ற சாக்கடை குப்பைகளைப் பணியில் இருந்த சில போக்குவரத்து போலிஸ்காரர்கள் கொட்டும் மழையிலும் அப்புறப்படுத்தினார்கள்.
போலிஸ்காரர்கள் சமூகப் பணியில் இறங்கியதை பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர். படம்: தமிழக ஊடகம்