ராயபுரம்: தமிழ்நாட்டில் இந்தியை எந்த வகையிலும் அனுமதிக்கப் போவதில்லை என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டார்.
ராயபுரத்தில் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஒன்றில் இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர், அண்மையில் தேசிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா கருத்து கூறியதில் தவறு எதுவும் இல்லை என்றார்.
கமல்ஹாசன் பிக்பாஸில் மும்முரமாக இருப்பதால் வேலூர் தொகுதியில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டதாக குறிப்பிட்ட அவர், திமுகவினர் மொழியை வைத்து வியாபாரம் செய்கின்றனர் என்றார்.