சென்னை: பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை தொடர்பாக கடந்த ஆண்டு தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானம் ஆளுநரின் பரிசீலனையில் உள்ளது என்றும் இந்த விவகாரத்தில் ஆளுநரின் முடிவுக்காகக் காத்திருப்பதாகவும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்றுத் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் பொதுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், “110 விதியின் கீழ் அறிவிக்கப்படும் அறிவிப்புகள் வெறும் காட்சிப் பொருளாகவே உள்ளன. ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே கல்வி என மத்திய அரசு வெறுப்பு அரசியலை வளர்க்கிறது. சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும். தமிழகத்திற்கு ஆளுநர் பதவி தேவையில்லை என்பதே எங்களது நிலைப்பாடு,” என்றார்.
இதற்குப் பதில் அளித்த ஓபிஎஸ், சட்டப்பேரவை நட வடிக்கைகளை நேரலை செய்ய வேண்டும் என்ற வழக்கு நீதி மன்றத்தில் உள்ளது என்றார்.