நெல்லை: நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் திமுக பெண் பிரமுகர் சீனியம்மாளிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ள சிபிசிஐடி போலிசார் அவருக்கு அழைப்பாணை அனுப்பவுள்ளனர். இந்த வழக்கு குறித்து பாளை குற்றப்பிரிவு மற்றும் தனிப்படை போலிசார் தீவிர விசாரணை நடத்தி கார்த்திகேயனை கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.
திமுக பெண் பிரமுகர் சீனியம்மாளின் மகனான கார்த்திகேயன், தனது தாயாரின் அரசியல் வாழ்க்கை சரிவுக்கு உமா மகேஸ்வரியே காரணம் என்றும் அவரையும் அவரது கணவர் முருக சங்கரனையும் கத்தியால் குத்தி கொலை செய்ததாக விசாரணையில் கூறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.