தேர்தல் களத்தில் எந்தப் பயனும் இல்லை: தேமுதிகவை கழற்றி விடுகிறது அதிமுக

சென்னை: தேமுதிகவால் அதிமுக கூட்டணிக்கு எந்தவிதப் பலனும் இல்லை என்பதால் அக்கட்சியை கூட்டணியில் இருந்து கழற்றிவிட அதிமுக தலைமை முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி இடம்பெற்று நான்கு தொகுதிகளைப் பெற்ற தேமுதிக, ஓரிடத்தில் கூட வெற்றி பெறவில்லை. மேலும் வேலூர் தேர்தலில் தேமுதிக மேற்கொண்ட பிரசாரமும் எடுபடவில்லை என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

விஜயகாந்த் தீவிர அரசியலில் ஈடுபடாத நிலையில், தேமுதிகவுக்கு மாநிலக் கட்சி என்ற அந்தஸ்தும் பறிபோனது.

இதையடுத்து உள்ளாட்சித் தேர்தலில் மீண்டும் தேமுதிகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த அதிமுகவின் மூத்த பிரமுகர்கள் விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து அதிமுக கூட்டணியில் இருந்து இக்கட்சியை கழற்றிவிட முடிவு செய்திருப்பதாக தமிழக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் தேமுதிக அதிருப்தியில் உள்ளதாகத் தெரிகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!