ஸ்டெர்லைட் அதிக மாசு ஏற்படுத்தும் ஆலை எனப் புகார்

சென்னை: ஸ்டெர்லைட் ஆலையால் பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதால், அவர்கள் தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது.

மேலும் வழக்கு விசாரணையின் போது நாட்டில் அதிகமாசு ஏற்படுத்தும் 17 ஆலைகளில் ஸ்டெர்லைட் ஆலையும் ஒன்று என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

தூத்துக்குடி மக்களின் நீண்ட போராட்டத்தை அடுத்து ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது. இதையடுத்து அதை மீண்டும் திறக்க உத்தரவிடக் கோரி, அதன் உரிமையாளரான வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடுத்துள்ளது.

இந்த வழக்கு மீதான விசாரணை நேற்று முன்தினம் மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வின் முன் நடைபெற்றது.

அப்போது ஆலைக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வரும் பேராசிரியர் பாத்திமா தரப்பில் மூத்த வழக்கறிஞர் வைகை வாதிட்டார்.

தமது வாதத்தின் போது விவசாய நிலப் பகுதியில் ஆலை அமைக்கப்பட்டுள்ளது என்றும், இது விதிமீறல் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

“நாட்டில் அதிக மாசு ஏற்படுத்தும் அலைகளில் ஸ்டெர்லைட்டும் ஒன்று. இதை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமே தெரிவித்துள்ளது. இந்நிலையில், மாசு ஏற்படுத்தவில்லை என தொடர்ந்து ஸ்டெர்லைட் தரப்பில் தவறான தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.

“தமிழக அரசு, ஸ்டெர்லைட் ஆலைக்கு உடந்தையாக செயல்பட்டது துரதிருஷ்டவசமானது,” என்றார் மூத்த வழக்கறிஞர் வைகை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!