தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்: இல.கணேசன் தகவல்

தஞ்சை: இந்தியாவிலேயே அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாக பாஜக உருவெடுக்கும் என அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற கொள்கையில் பாஜக வெற்றி பெறும்,” என்றார்.

“கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஊழல் இல்லாத ஆட்சியைக் கொண்டு வருவோம் என உறுதி எடுத்தோம். அதன்படி தற்போது ஊழலை ஒழித்துவிட்டோம்.

“அடுத்து ஊழல்வாதி களை ஒழிக்கும் முயற்சி யில் ஈடுபட்டு உள்ளோம். நாங்கள் அனைத்திலும் வெற்றி பெறுவோம்,” என்றார் இல.கணேசன்.

உட்கட்சித் தேர்தலை நடத்தி முடித்து, இந்த ஆண்டுக்குள் அனைத்து பொறுப்புகளுக்கும் நிர்வாகிகள் நியமிக்கப் படுவர் என்று குறிப்பிட்ட அவர், டிசம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் தமிழக பாஜகவுக்கும் புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்றார்.

தமிழக பாஜக தலைவர் பதவியைப் பிடிப்பதற்கு அக்கட்சியின் முக்கிய மாநில நிர்வாகிகள் மத்தியில் பலத்த போட்டி நிலவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மூன்று பேரை அக்கட்சி மேலிடம் தலைவர் பதவிக்கு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!