சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வேலூரில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்கு பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.
சென்னையின் பல்வேறு பகுதி
களிலும் பெய்த கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
கும்பகோணத்தில் ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக கன மழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த சில நாட்களாக கும்பகோணத்திலும் சுற்றுவட்டாரத்திலும் கடும் வெயில் கொளுத்தியது.
இந்நிலையில், வெப்பத்தில் இருந்து விடுவிக்கும் விதமாக நேற்று முன்தினம் மாலை கன மழை பெய்தது. இதன் காரணமாக பூமி குளிர்ந்து, குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கிணறு, குளம், ஏரி, கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன.
நாமக்கல் மாவட்டத்தில், நேற்று முன்தினம் இரவு முழுவதும் சாரல் மழை பெய்தது.
கனமழை காரணமாக வேலூர் மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.