வீடுகளில் குறியீடு வரைந்தவர்களிடம் தீவிர விசாரணை

திண்டிவனம்: வீடுகளின் வெளிப்புற மற்றும் மதில் சுவர்களின் மீது ரகசியக் குறியீடுகள் வரைந்த நேப்பாள இளையர்கள் மூன்று பேரிடம் திண்டிவனம் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன் திண்டிவனம் அருகே உள்ள கோபாலபுரம் கிராமத்தில் மூன்று இளையர்கள் வீடு வீடாகச் சென்று பழைய துணிகளைச் சேகரித்துள்ளனர். அவர்கள் வந்து சென்ற சிறிது நேரத்தில் வீட்டுச் சுவர்களில் ரகசிய குறியீடுகள் வரையப்பட்டிருப்பதைக் கண்டு மக்கள் குழம்பினர்.

இதையடுத்து பெரிய அளவில் கொள்ளையடிக்க வடமாநிலக் கும்பல் ஒன்று திட்டமிட்டிருப்பதாக கிராம மக்கள் மத்தியில் பீதி பரவியது. இதனால் இரவு முழுவதும் கிராம மக்கள் தூங்காமல் இருந்துள்ளனர்.

இதற்கிடையே திண்டிவனம் நகரிலும் சில வீடுகளில் இத்தகைய குறியீடுகள் காணப்பட்டதால் போலிசில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலிசார் ஆய்வு செய்தபோது, இளையர்கள் மூவர் குறியீடு இடுவது உறுதி செய்யப்பட்டது.

மூவரையும் கண்டுபிடித்த போலிசார், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மூவரும் கூர்காவாக இருப்பதாகவும் பணம் தராத வீடுகளில் குறியீடு வரைந்து வைத்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மூவரிடமும் விசாரணை நீடித்து வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!