விருத்தாசலம்: கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள பேரளையூர் கிராமத்தில் நேற்று இரவு சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. விடிய விடிய பெய்த மழையால் மின்கம்பங்கள் சாய்ந்தன.
இதனால் அப்பகுதியில் மின் வினியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் விடிய விடிய மின்சாரம் இல்லாததால் கொசுக்கடியில் அவதி அடைந்தனர்.
விருத்தாச்சலம் பகுதியில் பெரும்பாலான பகுதிகளில் மழையின் காரணமாக மின் வினியோகம் நிறுத்தப்பட்டது.
இதேபோல் கம்மாபுரம், ஆலடி, மங்கலம்பேட்டை, கருவேப்பிலங்
குறிச்சி ஆகிய பகுதிகளிலும் விடிய விடிய மழை பெய்தது. அத்துடன் கடலூர், முதுநகர், நெல்லிக்குப்பம், மேல்பேட்டை, பாலூர், நடுவீரப்பட்டு, கோண்டூர், நத்தப்பட்டு உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.
அத்துடன் பண்ருட்டி பகுதி, காடாம்புலியூர், அண்ணா கிராமம், முத்தாண்டிக்குப்பம், புதுப்பேட்டை, கண்டரக்கோட்டையிலும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளிலும் மழை விடாது பெய்தது.