காதல் திருமணம்: ஓட்டுநர் கொலை; 11 பேர் கைது

தஞ்சை: காதல் விவகாரத்தில் கருணாகரன் என்ற ஓட்டுநர் ஒருவர் அடித்துக்கொல்லப்பட்டார். இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக ஒரு சிறுவன் உள்பட 11 பேர் கைதாகினர். இதைத் தொடர்ந்து பெருமாக்கநல்லூர் கிராமத்தில் பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை அருகே உள்ள பெருமாக்கநல்லூரைச் சேர்ந்த சதாசிவத்தின் மகன் சூர்யா, 22. இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். அதே ஊரைச் சேர்ந்தவர் கருணாகரன், 42. இவரது உறவினரான 17 வயது சிறுமியும் சூர்யாவும் காதலித்து வந்தனர்.

இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்தக் காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் சூர்யாவும் சிறுமியும் கடந்த 18ஆம் தேதி திடீரென தலைமறைவாகிவிட்டனர்.

இதையடுத்து சிறுமியின் உறவினர்கள் சூர்யாவின் குடும்பத்தினரை தாக்கினர். இதற்கு பதிலடியாக சூர்யாவின் உறவினர்கள் கருணாகரனை கட்டையால் தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!