ஒரு ரூபாய் கட்டணத்தில் கல்வி கற்பிக்கும் அதிகாரி

திருச்சி: திருச்சியில் மாதம் 1 ரூபாய் கட்டணம் மட்டுமே பெற்று பள்ளி மாணவர்களுக்கு ‘டியூஷன்’ வகுப்பை நடத்தி வரும் பெண் அலுவலரை (படம்) ஏராளமானோர் பாராட்டி வருகின்றனர்.

திருச்சி, அரியமங்கலம் பகுதி யைச் சேர்ந்தவர் கோமதி, 47. திருமணமாகாத இவர், ஈவெரா கல்லுாரியின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார்.

பணி முடிந்து வீடு திரும்பியதும் ஒரு தொண்டு நிறுவனத்தினர் நடத்தும் டியூஷன் சென்டரில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.

இதுகுறித்து கோமதி கூறுகையில், “ஆசிரியர் பணி செய்யவேண்டும் என சிறு வயதி லிருந்து ஆசைப்பட்டதால் டிஎம்எஸ்எஸ் என்ற தொண்டு நிறுவனத்தில் டியூஷன் எடுக்கும் பணியை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டேன்.

“இலவசமாக நடத்தினால் மதிப்பு இருக்காது என்பதால் 1 ரூபாய் கட்டணம் பெற்று 16 ஆண்டுகளாக 60க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கிறேன்.

தொண்டு நிறுவனத்தின் சார்பில் ஊக்கத் தொகை வழங்காவிட்டாலும் தொடர்ந்து டியூஷன் நடத்திவருகிறேன்.

நானும் தெரு விளக்கு வெளிச்சத்தில் படித்த கார ணத்தால் மாணவர்களின் கஷ்டம் எனக்கு தெரியும். மாணவர்களுக்கு பாடம் நடத்த வசதியான இடம் கிடைக்காததால் தெரு விளக்கு வெளிச்சத்தில் இரு பிரிவாக பாடம் நடத்துகிறேன். சரியான இடம் இல்லாததால் மழைக் காலத்தில் மிகவும் சிரமம் ஏற்படுகிறது. அரசு தரப்பிலோ, சேவை மனப்பான்மை உள்ளவர்களோ போதுமான இட வசதி செய்து கொடுத்தால் இந்தப் பணியை இன்னும் சிறப்பாக செய்ய முடியும்,” என்று கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!