தஞ்சாவூர்: தஞ்சையில் உள்ள தென்னக பண்பாட்டு மையம், டெல்லி சங்கீத நாடக அகாடமி ஆகியன சார்பில் பண்பாட்டு மையத்தில் கலைகளின் சங்கம திருவிழா ஐந்து நாட்களுக்கு நடக்கிறது.
சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், “ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டடக் கலைகளின் நுணுக்கங்களைத் தமிழர்கள் அறிந்து இருந்ததற்கான சான்றாக சோழர்கள் கட்டிய இந்த வரலாற்றுச் சின்னம் நிமிர்ந்து நிற்கிறது.
தமிழகத்தின் நாட்டுப்புறக் கலைகள் மற்றும் தமிழ் இசை குறித்த குறிப்புகள் சங்ககால இலக்கியங்களில் பரவலாகக் கிடைக்கின்றன. 6ஆம் நூற்றாண்டு முதல் 10ஆம் நூற்றாண்டு வரை தெய்வீக தமிழ் இசை தமிழகத்தில் தழைத்தோங்கியது. தமிழ் மொழிபோல் இனிமையான மொழி வேறு இல்லை,” என்று பேசினார்.