நீர்வரத்து குறைந்தது; மேட்டூர் அணையில் 16 மதகுகள் மூடல்

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்ததையடுத்து அணையின் 16 கண் மதகுகள் மூடப்பட்டன. அணையில் இருந்து பாசனத்துக்கு விநாடிக்கு 18,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

கர்நாடக மாநில அணைகள் நிரம்பி உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டதால் அணைக்குப் பல நாட்களாக தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தது.

கடந்த 6ஆம் தேதி அணை நீர்மட்டம் 118.11 அடியாக உயர்ந்தது. அன்று நீர்வரத்து விநாடிக்கு 73,000 கனஅடியாக இருந்த நிலையில், அன்று இரவு அணையில் இருந்து கூடுதலாக நீரை வெளியேற்ற 16 கண் மதகுகள் திறக்கப்பட்டன. கடந்த 7ஆம் தேதி அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இப்போது மழை குறைந்ததைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக அணைக்கு நீர்வரத்து படிப்படியாகக் குறைந்து வருகிறது. இதனால் நீர் வரத்தும், தண்ணீர் திறப்பும் குறைந்ததை அடுத்து சனிக்கிழமை காலை 9 மணியளவில் 16 கண் மதகுகள் மூடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை மாலை 120 அடியாகவும் நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் இருந்தது என்று அணையின் நிர்வாகம் தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!