பங்ளாதேஷ் ஆடவரிடம் விசாரணை

பங்ளாதேஷ் ஆடவரிடம் விசாரணை

1 mins read

கோவை: கோவையில் நகைப்பட்டறையில் வேலை பார்த்து வந்த பாரூக் கவுசீர் என்ற பங்ளாதேஷைச் சேர்ந்த ஆடவரிடம் கோவை போலிஸ் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. கைது செய்யப்பட்டுள்ள பாரூக், பாகிஸ்தானில் உள்ள வாட்ஸ் அப் குழுக்களில் இணைந்து தீவிரமாக செயல்படுவது பற்றி ஆலோசித்து வந்ததாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அவரிடம் விசாரணை நடக்கிறது. அவர் துப்பாக்கி தொடர்பான தகவல்களைப் பகிர்ந்ததாகவும் போலிஸ் தெரிவிக்கிறது.