திருப்பூர்: திருப்பூரில் வெண்ணெய் இல்லாமல் டால்டா, பாமாயில் கலந்து போலி நெய் தயாரித்த ஏழு வீடுகள் இழுத்து மூடப்பட்டன. அந்த வீடுகளில் இருந்து சுமார் 500 லிட்டர் போலி நெய் பறிமுதலானது.
உணவு பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த அலுவலர் மேற்கொண்ட நடவடிக்கையில் போலி நெய் சிக்கியது.

