கோவையில் கஞ்சா விற்ற ஒடிசா மாநிலத்தவர் கைது

கோயம்புத்தூர்: கோவை- அன்னூர் சாலையில் கணேசபுரம் அருகே அன்னூர் காவல்துறை இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த மொபட்டைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

சோதனை செய்தபோது மொபட்டில் விற்பனைக்காக 3 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தது தெரிய வந்தது.

பின்னர் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அக்‌ஷயா தாஸ் (வயது 40) என்பதும் இவர் கடந்த 10 ஆண்டுகளாக அன்னூர் அருகே உள்ள மாசகவுண்டன் பாளையத்தில் வீடு வாடகைக்கு எடுத்துத் தங்கி இருப்பதும் தெரிய வந்தது.

மேலும் இவர் வட மாநிலத்தில் இருந்து ஆட்களை வேலைக்கு அமர்த்தும் முகவராக இருப்பதும் தெரியவந்தது.

இவர் கடந்த சில ஆண்டுகளாக தனது மனைவி பிஜாய் லட்சுமி தாஸ் (30) என்பவருடன் சேர்ந்து ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.

இதனை அடுத்துக் காவல்

துறையினர் வீட்டுக்குச் சென்று சோதனை நடத்தினர்.

சோதனையில் வீட்டில் இருந்து 23.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மேலும் கணவருடன் சேர்ந்து கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த பிஜாய் லட்சுமிதாசை கைது செய்தனர்.

இவர்கள் பயன்படுத்திய ஒரு மொபட்டையும், காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

விசாரணை முடிந்தபின்னர் கணவன்-மனைவி இருவரையும் மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!