ஈரோடு: வேலை வாங்கித் தருவதாகக் கூறி சுமார் 35 வயதுள்ள இரு பெண்களைத் தன் வீட்டிற்கு வரவழைத்து அவர்களைப் பாலியல் வலையில் சிக்கவைக்க முயன்ற 72 வயது பாட்டி கைதானார்.
ஈரோடு சின்னசெட்டிபாளையத் தைச் சேர்ந்த சரோஜா என்ற அந்தப் பாட்டி அழைத்ததால் சசிகுமார் என்ற 27 வயது குடிநீர் சரிபார்ப்பு ஊழியர் ஒருவர் அவருடைய வீட்டிற்குப் போனார்.
அந்த ஊழியரிடம் ரூ.1,000 கொடுத்தால் உல்லாசமாக இருக்கலாம் என்றும் அதற்கு வசதியாக தன் வீட்டில் இரண்டு பெண்கள் இருப்பதாகவும் பாட்டி கூறினார்.
சசிகுமார் அந்தப் பெண்களிடம் பேசியதை அடுத்து உண்மை தெரியவந்தது. அவர் பாட்டியை போலிசிடம் காட்டிக்கொடுத்து பெண்களை மீட்டார். பெண்கள் ஈரோட்டில் உள்ள பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.